புரட்சிகள் என்னில் ஆரம்பம்
உள்ளடக்கம்  
  நுழைவாயில்
  மக்கள் சக்தி இயக்கம்
  என் குமுறல்கள்
  நான் ரசித்தவை
  கருத்துக் கணிப்பு
  தொடர்புக்கு
  உங்கள் கருத்துக்களை பதிவுச்செய்ய.
நான் ரசித்தவை
 
எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களின் எழுத்தோவியங்களில் சில 
 
  • சுமை அதிகமாய் இருக்கிறதே என்று அழவில்லை ஆண்டவனே,
    முதுகை அகலமாக்கித் தா என்றுதான் கேட்கிறேன். 
  • எதை மனித மனம் கற்பனையில் உருவாக்குகிறதோ,  நம்புகிறதோ அதை அதனால் அடைய முடியும்.
  • காலவரையறை இல்லாத திட்டங்கள் வெறும் கற்பனைகள்.
  • சங்கடங்களை சந்தர்ப்பங்களாக நினைக்கக் கற்றுக் கொள்ள                                                                                                            வேண்டும்.
     

வைரமுத்து அவர்களின் வைரவரிகள்

                                                           வறுமை

  • தாயின் கிழிந்த புடவையின் கிழியாத பிரதேசத்தை தாவணியாய் மாற்றிக் கட்டிக்கொள்ளும் அந்தக்                                கிராமத்துச் சிட்டுக்கள்.
  • மலையில் விறகு எடுத்துக் கொண்டு வந்து,விற்றுவிட்டுத் தன் வீட்டு அடுப்புக்கு மட்டும் சுள்ளிகளைச் சேகரித்துக் கொண்டு வரும் சோதரிகள் 

                                                                     காதல்

  • மவுனங்களால் உச்சரிக்கிற புனிதமான வார்த்தை
  • மறைத்தாலா தாழை மணங்குறையும்? நீரில் கரைத்தால தங்கம் கரையும்? கரையில் இறைத்தால வற்றிடும் ஏழுகடல்?நெஞ்சில் மறையாது காதல் மலர்.
  • நான் வானத்தையும் மேகத்தையும் பார்த்து அழுவதை மட்டும் கண்ணீர் என்று சொல்லலாம், நான் காதலுக்காக அழுவதை மட்டும் கண்ணீர் என்று சொல்லாதீர்கள் அது என் "ஆன்மாவின் ரத்தம்".   

     .       சீதையின் கண்ணீருக்கு  சக்தியிருந்தது 

              கண்ணகியின் கண்ணீருக்குச் ரித்திரமிருந்தது   

               எனது கண்ணீருக்குள் ஒரு "சங்கீதமே" இருக்கிறது

                                                                                                                        

                                                   ஜாதி

     ·        கல்யாண "எலும்புத் துண்டு" விழுகிற வரைக்கும்தான்           

       "ஜாதி நாய் குரைக்கும்", அதன் பிறகோ "வாழை குழைக்கும்".

   

பா.விஜயின் தூரிகை... துப்பாக்கியாகிறது.

 

  • நீ வாள் ஏந்தினால் அது வன்முறை, நீ வாளுக்கு இரையானால் அது அஹிம்சை
  • தெய்வத்திற்கு வேண்டுதல் தேங்காய் உடைப்பு!..   அய்யர் வீட்டிற்குச் சட்னி!
  • முயற்சி என்பது உனக்கு வழங்கப்பட்ட இரண்டாவது முதுகெலும்பு.
  • தேவைகள் கேட்கப்படட்டும், மறுக்கப்பட்டால் பிடுங்கப்படட்டும்.
  • இனி தமிழ்கூறு நல்லுலக்கெங்கம்எழுதுகோல்கள் ஏவுகணைகளாகுக

தூரிகைகள் துப்பாக்கிகளாய்வடிவம் பெறுக.

 

அறிமுகம்  
  [umfrage]  
Today, there have been 1 visitors (13 hits) on this page!
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free